Bhagavad Gita: Chapter 1, Verse 19

ஸ கோ3ஷோ தா4ர்த1ராஷ்ட்ராணாம்ஹ்ருத3யானி வ்யதாரயத்1 |

நப4ஶ்ச1 ப்1ருதி2வீம் சை1வ  து1முலோப்44னுநாத3யன் ||
19 ||

ஸஹ----அந்த; கோஷஹ----ஒலியலை அதிர்வு; தார்தராஷ்ட்ராணாம்----த்ருதராஷ்டிரனின் மகன்களின்; ஹ்ருதயானி----இதயங்களை; வ்யதாரயத்--—சிதைத்தது; நபஹ----வானமும்; ச----மற்றும்; ப்ருதிவீம்----பூமியும்; ச----மற்றும்; இவ----போல்; துமுலஹ----பயங்கர ஒலி; அப்யனுநாதயன்--- இடி முழக்கின

Translation

BG 1.19: த்ருதராஷ்டிரரே,  பயங்கர ஒலி வானத்திலும் பூமியிலும் இடித்து, உங்கள் மகன்களின் இதயங்களை சிதைத்தது.

Commentary

பாண்டவ இராணுவத்தின் பல்வேறு சங்கு ஓடுகளின் மிகப்பெரிய ஒலி அவரது மகன்களின்  இதயங்களை சிதைத்து வருவதாக சஞ்ஜயன்  த்ரிதராஷ்டிரருக்கு தெரிவித்தார். இருப்பினும், கௌரவ சேனைகள் தங்கள் சங்குகளை ஊதும் பொழுது பாண்டவர் படையில் அத்தகைய பாதிப்பு எதுவும்குறிப்பிடப்படவில்லை.  பாண்டவர்கள் இறைவனிடம் தஞ்சம் புகுந்ததால், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தனர். மறுபுறம், கௌரவர்கள், தங்கள் சொந்த பலத்தை நம்பி, தங்கள் குற்றங்களின் மனசாட்சியால் குத்தப்பட்டு, தோல்விக்கு பயந்தனர்.

Swami Mukundananda

1. அர்ஜுன விஷாத யோகம்

Subscribe by email

Thanks for subscribing to “Bhagavad Gita - Verse of the Day”!